அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது குற்றப்பத்திரிகை தாக்கல்! - Seithipunal
Seithipunal


அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, ஆவின் உள்ளிட்ட அரசு நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.3 கோடி மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள இரு வழக்குகளின் குற்றப்பத்திரிகைகள், ஸ்ரீவில்லிபுத்தூர் நீதித்துறை நடுவர் எண் 2-இல் விருதுநகர் குற்றப் பிரிவு போலீசாரால் இணையவழியாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2021-ல், சாத்தூரைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி ரவீந்திரன், பால்வளத் துறை அமைச்சர் பதவியில் இருந்தபோது ராஜேந்திர பாலாஜி வேலை வாய்ப்பு வாக்குறுதியுடன் ரூ.30 லட்சம் பெற்றதாக புகார் அளித்தார். 

அதனடி­யில், அவர் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு பதியப்பட்டது. அதேநாளில், மற்றொரு புகாரில் விஜய் நல்லதம்பி, ஆவின், ஊராட்சி மற்றும் கூட்டுறவுத் துறைகளில் வேலை வாங்கிக் கொடுக்க பலரிடம் பணம் பெற்று, ராஜேந்திர பாலாஜிக்கு ரூ.3 கோடி வழங்கியதாக குறிப்பிட்டார்.

இவை தொடர்பான வழக்கில் தலைமறைவான ராஜேந்திர பாலாஜி 2022 ஜனவரி 5-ஆம் தேதி கர்நாடகத்தில் கைது செய்யப்பட்டார். 2023-ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டபோது, ஊழல் பிரிவுகள் இல்லாததால் அது நிராகரிக்கப்பட்டது.

பின்னர், வழக்கு சி.பி.ஐ.-க்கு மாற்றப்பட்டதற்கும், அதற்கான உச்சநீதிமன்ற இடைக்கால தடைக்கும் பின்னணியில், தற்போது ஆளுநரின் அனுமதி பெறப்பட்டு, அதிகாரபூர்வ குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவை விரைவில் விசாரணைக்கு வரும் என காவல்துறை தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ADMK Rajendra Balaji Case


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->