அதிமுகவினரை அதிரவைத்த பவன் கல்யாண்! நன்றிகூட சொல்ல முடியாத நிலை! கொண்டாட்டத்தில் ஓபிஎஸ் தரப்பு! - Seithipunal
Seithipunal


அதிமுகவின் 53வது ஆண்டு விழாவை ஒட்டி எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்.க்கு ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ். இடம் பெற்றுள்ள தேசிய ஜனநாயக கூட்டணியில், ஆந்திர மாநிலத்தில் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சியும் இடம் பெற்றுள்ளது.

கடந்த சில நாட்களாகவே அதிமுக மற்றும் எடப்பாடி பழனிசாமிக்கு சில வாழ்த்துக்களை தொடர்ந்து தெரிவித்து வந்த பவன் கல்யாண், இன்று அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ்-க்கும் சேர்த்து வாழ்த்து தெரிவித்து பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ளார்.

பவன் கல்யாணின் அந்த வாழ்த்து செய்தியில், எடப்பாடி பழனிச்சாமியின் ஆற்றல் மிக்க, சிறந்த தலைமையின் கீழ், எம்.ஜி.ஆரின்  கொள்கைகளை அதிமுக தொடர்ந்து காப்பாற்றி வருகிறது.

அதிமுக அரசின் முதலமைச்சராக சிறப்பாக செயலாற்றிய ஓ. பன்னீர்செல்வம் அவர்களுக்கும் இந்த நன்நாளில் மனமார்ந்த என் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் என்று பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.

அதிமுக பொது செயலாளர் இபிஎஸ்-க்கு வாழ்த்து தெரிவித்துள்ள பவன் கல்யாண், அதே பதிவில் ஓ.பி.எஸ்-க்கும் வாழ்த்து தெரிவித்திருப்பதால், நன்றி சொல்ல முடியாத தர்ம சங்கடத்தில் அதிமுகவினர் சிக்கியுள்ளனர்.

மேலும், இதனை பாஜக கூட்டணியில் இருந்து ஈ.பி.எஸ்.-க்கு வந்த வாழ்த்து செய்தியாகவே அரசியல் விமர்சகர்கள் கருது தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK edappadi palanisamy O PaneerSelvam AndhraPradesh Deputy CM Pawan Kalyan


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->