#BigBreaking | தொடங்கியது அதிமுகவின் செயற்குழு! இந்த பக்கம் ஓபிஎஸ் செய்த சம்பவம்! - Seithipunal
Seithipunal


அதிமுகவின் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில், அதிமுகவின் செயற்குழு கூட்டம் சற்று முன்பு தொடங்கியுள்ளது.

இந்த செயற்குழு கூட்டத்தில் மூத்த தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

செயற்குழு கூட்டத்தில் முக்கிய விவாதமாக கர்நாடக சட்டமன்ற பொது தேர்தலில் அதிமுக கூட்டணி வைத்து போட்டியிடலாமா? தனித்துப் போட்டியிடலாமா? அல்லது பாஜகவிற்கு ஆதரவு தெரிவிக்கலாமா? என்பது குறித்த முடிவு எடுக்கப்பட உள்ளதாக தெரிய வருகிறது.

மேலும் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு இந்த செயற்குழு கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அது மட்டுமில்லாமல் அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்ந்தெடுக்கப்பட்டதை அங்கீகரிக்க பொதுக்குழு கூட்டுவதற்கு உண்டான முடிவுகளும் அல்லது பொதுக்குழுக்கான தேதியும் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது ஒருபுறம் நடந்து கொண்டிருக்க. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ பன்னீர்செல்வம், கோடை காலத்தை முன்னிட்டு அவரின் ஆதரவாளர்கள் அமைத்த தண்ணீர் பந்தலை திறந்து வைத்து, மக்களுக்கு இளநீர், மோர் உள்ளிட்டவைகளை வழங்கிக் கொண்டிருக்கிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AIADMK GS EPS Seyarkuzhu OPS Action


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->