ஸ்டாலின் ஆட்சியின் லட்சணம்? சேரும், சகதியுமான புத்தகத்திருவிழா.! அர்ஜுன் சம்பத் கேள்வி.! - Seithipunal
Seithipunal


கரூர் மாவட்டத்தில் உள்ள திருமாநிலையூர் புதிய பேருந்து நிலையத்திற்கு அருகில் தற்காலிக அரங்குகள் அமைக்கப்பட்டு புத்தகத் திருவிழா கடந்த 19ஆம் தேதி துவங்கப்பட்டது. இந்த புத்தகத் திருவிழா நாளை நிறைவடைய இருக்கிறது. இத்தகைய நிலையில், நேற்று முன்தினம் கரூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் 3 மணி நேரம் பெய்த கனமழையின் காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. 

தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. எனவே, புத்தகத் திருவிழா அரங்குகளில் மழை நீர் சூழ்ந்தது.  நீண்ட நேரமாக பெய்த மழையின் காரணமாக புத்தகத் திருவிழா நடைபெற்ற மைதானத்தில் மழைநீர் வெள்ளம் புகுந்து ஏராளமான புத்தகங்கள் நீரில் மூழ்கின. நேற்று அதிகாலை பொதுப்பணித்துறையினர் பொக்லைன் இயந்திரத்தின் மூலம் மழை வெள்ளத்தை வடித்தனர். 

புத்தக திருவிழா அரங்கின் முற்பகுதிகளில் சேரும் சகதியும் காணப்பட்டது.
எனவே பள்ளிகளுக்கு மாணவர்களை புத்தகத் திருவிழாவிற்கு அழைத்து வர வேண்டாம் என்று தகவல் கொடுக்கப்பட்டது. விடுமுறை நாள் என்ற காரணத்தால் புத்தக திருவிழாவை காண வந்த பொதுமக்களும் அனுமதிக்கப்படவில்லை  இதன் காரணமாக பலரும் ஏமாற்றுடன் திரும்பி சென்றனர்.

இந்த நிலையில், தற்போது இதுகுறித்து இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தனது ட்விட்டர் பக்கத்தில், " இப்படி விமானத்துல பறக்கும் போது எல்லாம் கோப்பு பார்த்துட்டு போய் பண்ற ஆட்சியின் லட்சணமா இது?" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Arjun sampath about karur book fair ruined Issue


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->