ஜல்லிகட்டு முன்பதிவு செய்த விவரம்: முக்கிய தகவல் - Seithipunal
Seithipunal


மதுரை ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான மாடுபிடி வீரர் மற்றும் காளைகளுக்கான ஆன்லைன் டோக்கன்கள் முன்பதிவு நிறைவு பெற்றது. நேற்று மாலை 5 மணிக்கு தொடங்கிய முன்பதிவு இன்று மாலை 5 மணி வரை நடைபெற்றது. 3 ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க 8,000க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள், 10,000-க்கும் மேற்பட்ட முன்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் உள்ள அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு  போட்டிகளில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கான ஆன்லைன் முன்பதிவு  நேற்று தொடங்கியது. இன்று மாலை 5 மணி வரை பதிவு செய்து கொள்ளலாம்.

 madurai.nic.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம். பதிவு செய்ததும் அவர்களுக்கான அனுமதிச்சீட்டை ஆன்லைனில் பதிவிறக்கம்  செய்துகொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.   


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

jallikattu registration Madurai


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->