வக்ஃப் மசோதா: உடையும் பாஜகவின் கூட்டணி கட்சி! அடுத்தடுத்து 4 தலைவர்கள் விலகல்!
Bihar Politics JDU BJP Alliance
மக்களவையில் நேற்று வக்ஃப் திருத்த மசோதா 2024 நிறைவேற்றப்பட்டது. இதற்கு பாஜக கூட்டணியில் உள்ள பிகார் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியூ) கட்சி ஆதரவு தெரிவித்தது.
இதன் காரணமாக இதனால் கட்சிக்குள் பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. மசோதா நிறைவேற்றம் குறித்து கட்சியில் உள்ள முஸ்லிம் தலைவர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தப்ரேஸ் சித்திக் அலி, முகமது ஷா நவாஸ் மாலிக், முகமது காசிம் அன்சாரி ஆகிய மூவர் கட்சியை விட்டு விலகினர்.
இதனைத் தொடர்ந்து, முக்கிய தலைவராக இருந்த எம். ராஜூ நய்யாரும் ராஜிநாமா செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், "வக்ஃப் மசோதாவுக்கு ஜேடியூ ஆதரவு அளித்தது மிகவும் வேதனை தருகிறது. இது முஸ்லிம்களை ஒடுக்கும் சட்டம். எனவே, நான் கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுகிறேன். முதல்வர் நிதிஷ்குமாரிடம் இதற்கான அதிகாரப்பூர்வ கடிதத்தையும் அனுப்பியுள்ளேன்." எனத் தெரிவித்துள்ளார்.
பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கும் நிலையில், ஜேடியூவில் முக்கிய தலைவர்கள் தொடர்ந்து விலகுவது கட்சிக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
English Summary
Bihar Politics JDU BJP Alliance