செருப்பை கழட்டி அடிப்பாங்க! யாரை...? தமிழக மக்கள் ஒழுக்கமற்றவர்களா? - Seithipunal
Seithipunal


சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் பொன்விழா மற்றும் ‘இந்தி மாத’ நிறைவு விழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. 

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கிய இந்த நிகழ்ச்சியில் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் தற்போது பெரும் சர்ச்சையாகியுள்ளது.

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடியபோது, ‘தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்’ என்ற வரிகள் மட்டும் பாடப்படவில்லை. இதற்க்கு தமிழக முதல்வர் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "ஆர் எஸ் எஸ் ரவி அவர்களே, உங்கள் சித்தாந்தத்தை எங்கள் தமிழ்நாட்டு மக்களிடம் சொல்லுங்கள், செருப்பை கழட்டி அடிப்பாங்க" என்கிறார் தமிழகத்தின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

ஒழுக்கம், நேர்மை, நீதி, கண்ணியம், கட்டுப்பாடு, அமைதி, அகிம்சை, சேவை மனப்பான்மை, சுயநலமற்ற மனது, தேச பக்தி, தெய்வ பக்தி - இவை தான் ஆர் எஸ் எஸ்-ன் சித்தாந்தம்!

இதை தமிழ்நாட்டு மக்களிடம் சொன்னால் செருப்பை கழட்டி அடிப்பார்கள் என்று கூறுகிறீர்களே?

தமிழக மக்கள் ஒழுக்கமற்றவர்கள், நேர்மையற்றவர்கள், அநீதியானவர்கள், கண்ணியமற்றவர்கள், கட்டுப்பாடற்றவர்கள், வன்முறையாளர்கள், இம்சையில் நாட்டமுள்ளவர்கள், சுயநலமிக்கவர்கள், தேச விரோதிகள், நாத்திகர்கள் என்று சொல்லி கேவலப்படுத்துவது ஏனோ உதயநிதி ஸ்டாலின்? என்று நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP Narayanan condemn to DyCM Udhay DMK


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->