அதிமுக எம்.பி., எடுத்த நடவடிக்கை : காலைலயே வெளியான முக்கிய தகவல்.! - Seithipunal
Seithipunal


கடந்த ஜூலை மாதம் 11ஆம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓ.பன்னீா்செல்வம், எடப்பாடி கே.பழனிசாமி ஆதரவாளா்கள் இடையே மோதல் ஏற்பட்டது.

இந்த மோதலில் பேருந்து, காா், இருசக்கர வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. கலவரம் காரணமாக அதிமுக அலுவலகத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு, பின்னா் நீதிமன்ற உத்தரவின்பேரில் ‘சீல்’ அகற்றப்பட்டது.

இந்த கலவரம் தொடர்பாக சென்னை ராயப்பேட்டை காவல் நிலையத்தில் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. தொடர்ந்து, இந்த சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் சிபிசிஐடி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். 

அதிமுக அலுவலகத்தில் ஏற்பட்டுள்ள சேதங்களை பார்வையிட்டு வரும் சிபிசிஐடி போலீசார், மோதல் தொடர்பாக விரைவில் சம்மன் அனுப்பி விசாரிக்கவும் திட்டிமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, அதிமுக அலுவலகம் சூறை தொடர்பாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் எம்.பி., நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல் செய்து இருந்தார். அந்த மனுவில், "உரிய விசாரணை நடத்த சிபிசிஐடி-க்கு தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க டிஜிபி-க்கு உத்தரவிட வேண்டும்.

டிஜிபி உத்தரவிட தவறினால் வழக்குகளை வேறு தன்னிச்சையான விசாரணை அமைப்பு விசாரிக்க உத்தரவிட வேண்டும்" என்று அதிமுக எம்பி சிவி சண்முகம் தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CBCID POLICE IN ADMK OFFICE


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->