அடுத்த அதிர்ச்சி சம்பவம் | மக்களின் உயிரை குடிக்கும் சந்திரபாபு!  - Seithipunal
Seithipunal


ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தெலுங்கு தேசம் கட்சியின் சார்பில் ஆந்திர மாநிலம், குண்டூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், முன்னாள் ஆந்திரா முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டு, நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு வழங்கினார்.

குறிப்பாக ஏழை எளிய பெண்களுக்கு கைத்தறி சேலைகளை சந்திரபாபு நாயுடு வழங்கினார். இந்த நலத்திட்ட உதவி நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி தொடங்கியதும் ஒரு சில பெண்களுக்கு மட்டும் சந்திரபாபு நாயுடு சேலைகளை வழங்கிய பின்னர் புறப்பட்டுச் சென்றார். பின்னர் கூட்டம் அதிகமாக இருந்ததால் பெண்கள் முண்டியடித்துக் கொண்டு மேடையை நோக்கி படையெடுக்க தொடங்கினர்.

இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பல பெண்கள் கீழே விழுந்தனர். இதில் கீழே விழுந்தவர்கள் மீது ஏறி மற்றவர்கள் சென்றதால், கால்மிதி பட்டு மூன்று பெண்கள் சம்பவ இடத்துலயே உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

ஏற்கனவே கடந்த மாதம் 29ஆம் தேதி சந்திரபாபு நாயுடு பங்கேற்ற கூட்டத்தில் நெரிசல்  ஏற்பட்டு எட்டு பேர் உயிரிழந்த நிலையில், தற்போது இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் 3 பேர் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chandrababu Naidu Stampede


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->