அதையெல்லாம் நாங்கள் பொருட்படுத்தவில்லை - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பரபரப்பு பேட்டி!
Chennai Rains CM MK Stalin ADMK DMK
இன்று சென்னை கொளத்தூர் தொகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்தபின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்தாவது, "மக்கள் திருப்தியா இருக்காங்க.. எங்கள் பணி.. மக்கள் பணி.
அதுதான் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. எந்த மழை வந்தாலும் சமாளிப்பதற்கு அரசு தயாராக உள்ளது. மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக மக்களின் பாராட்டுகள் வருகின்றன.
பாராட்டுகள் அரசுக்கு வருவதை தாங்கிக்கொள்ள முடியாத ஒருசிலரின் விமர்சனமும் சமூக வலைதளங்களில் வருகிறது. அதையெல்லாம் நாங்கள் பொருட்படுத்தவில்லை" முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவிக்கையில், "20 செ.மீ. மழை பெய்தால் கூட தண்ணீர் தேங்காது என முதல்வரும், அமைச்சர்களும் தெரிவித்தனர். குறைந்த அளவு பெய்த மழைக்கே சென்னை தத்தளிக்கும் நிலையில் உள்ளது.
இன்னும் பல பகுதிகளில் தண்ணீர் வடியாமல் மக்கள் தவிப்பதை பார்க்க முடிகிறது. 1,840 கி.மீ. அளவுக்கு மழைநீர் வடிகால் பணிகள் அதிமுக ஆட்சியில் நிறைவடைந்தது. எஞ்சிய மழைநீர் வடிகால் பணிகளை திமுக அரசு முடிக்கவில்லை.
வடிகால் பணிகளை முழுமையாக செய்திருந்தால் சென்னையில் பிரச்சினை இருந்திருக்காது. திருப்புகழ் கமிட்டியின் பரிந்துரைகள் படி எடுத்த நடவடிக்கைகள் என்ன? திருப்புகழ் கமிட்டி அறிக்கை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்" என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
English Summary
Chennai Rains CM MK Stalin ADMK DMK