தி.மு.க வேட்பாளருக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு: பிரசாரம் செய்யாமல் திரும்பிய சோகம்.! - Seithipunal
Seithipunal


தேனியில் தேர்தல் பிரசாரம் செய்வதற்காக சென்ற தங்க தமிழ்செல்வனுக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அவர் பிரசாரம் மேற்கொள்ளாமல் திரும்பி சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தேனி தொகுதி தி.மு.க வேட்பாளரான தங்க தமிழ்ச்செல்வன், தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அதுபோல் பூமாலைகுண்டு என்ற கிராமத்தில் பிரசாரம் செய்வதற்காக தங்க தங்கத்தமிழ்செல்வன் சென்றபோது விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

 

மேலும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாசனத்திற்காக நீர் திறக்க வேண்டும் என பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டினர். 

இந்நிலையில் தங்க தமிழ்ச்செல்வனுக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து ஒலிபெருக்கி இணைப்பு துண்டிக்கப்பட்டது. 

இதனை அடுத்து தங்க தமிழ்ச்செல்வன் பிரசாரம் செய்யாமல் திரும்பி சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK candidate returning without campaign


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->