தமிழகம் | மது பாட்டில் கடத்தல் வழக்கில் திமுக பிரமுகர் கைது.! - Seithipunal
Seithipunal


தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே உள்ள ஹைவேவிஸ் பேரூராட்சியில் 7 மலை கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் மதுபானக் கடைகள் இல்லாததால் சின்னமனூர் பகுதியில் உள்ள மதுபானக் கடைகளில் இருந்து மொத்தமாக மது வாங்கி வந்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளது. 

இது குறித்து உத்தமபாளையம் காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் உத்தமபாளையம் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது, அவ்வழியாக வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனை நடத்தினர். 

அப்போது, 200 மது பாட்டில்களை காரில் கடத்தி வந்தது தெரிய வந்ததுள்ளது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், மது கடத்தி வந்தது வெண்ணி யாறு எஸ்டேட்டைச் சேர்ந்த 11-வது வார்டு தி.மு.க உறுப்பினர் தங்கதுரை என்பது தெரிய வந்ததுள்ளது.

இதனையடுத்து, காவல்துறையினர் மது கடத்திய தங்கதுரையை கைது செய்தனர். இதன் பின்னர், அவரிடம் இருந்த மது பாட்டில்கள் மற்றும் சொகுசு காரை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK Member arrest for liquor smuggling


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->