இது லிஸ்டிலயே இல்லையே.. எடப்பாடி பழனிச்சாமிக்கு திமுக தரப்பு திடீர் பாராட்டு.!! - Seithipunal
Seithipunal


சென்னை மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரின் 130வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது மணிமண்டபத்தில் உள்ள திருவுருவர் சிலைக்கு திமுக அமைச்சர் மஸ்தான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

அப்போது அவருடன் மாவட்ட ஆட்சியர் பழனி, மாவட்ட கண்காணிப்பாளர் தீபக் சிவாச், கூடுதல் ஆட்சியர் சூரியன் ஜெய் நாராயணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செஞ்சி மாஸ்தான் பேசியதாவது "சென்னை மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் அவர்களின் 13 ஆவது பிறந்த நாளை ஒட்டி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அன்னாரது திரையுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மழை தூவி மரியாதை செலுத்தப்பட்டது தமிழ்நாடு அரசு அன்னாரது நினைவாக தபால் தலையும் வெளியிட்டுள்ளது‌.

அப்போது இந்திய குடியுரிமை திருத்த சட்டம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேசியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர் "எடப்பாடி பழனிச்சாமி சிஏ சட்டத்துக்கு அன்று ஆதரவு அளித்தார், தற்போதாவது மக்களின் நலனை கருத்தில் கொண்டு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதற்காக நான் அவரை பாராட்டுகிறேன்" என பதில் அளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK minister appreciate AIADMK EPS


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->