குறுக்கு விசாரணை, ஆஜராகாத முக்கிய சாட்சி! 57வது முறையாக செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவல்! - Seithipunal
Seithipunal


திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 57 வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் செந்தில்பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வருகிறார்.

இவரின் ஜாமின் மேல்முறையீடு மனு மீதான விசாரணை இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், விரைவில் அவருக்கு ஜாமின் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில், செப்டம்பர் மூன்றாம் தேதி வரை செந்தில் பாலாஜியின் காவலை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அள்ளி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதற்காக இன்று காணொளி மூலம் செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். மேலும் செந்தில் பாலாஜி வழக்கின் சட்சிகள் விசாரணையும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.

இந்த வழக்கின் முதல் சாட்சியான கரூர் வங்கி கிளை மேலாளர் ஹரிஷ்குமார் ஆஜராகாததால், இன்று குறுக்கு விசாரணை நடைபெறவில்லை. 

ஏற்கனவே அமலாக்கத்துறை தரப்பில் ஹரிஷ்குமாரிடம் விசாரணை முடிந்த நிலையில், செந்தில் பாலாஜி தரப்பு அவரிடம் குறுக்கு விசாரணை நடத்தி வருகிறது. அது இன்னும் நிறைவடையாத நிலையில் இன்று அவர் ஆஜராகவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK Senthilbalaji ED Case Chennai Court


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->