மதுக்கடைகளால் தமிழ்நாடு சுடுகாடாக மாறுகிறது - அன்புமணி இராமதாஸ் ஆவேச பேச்சு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் இளைய தலைமுறையினரை சீரழிக்கும் மது, போதைப் பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, தமிழகம் முழுவதும் இன்று பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது.

இதில், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தலைமை தாங்கினார். 

இந்த ஆர்ப்பாட்டத்தில் அன்புமணி இராமதாஸ் பேசியதாவது, 

"போதைப் பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க வலியுறுத்தி இன்று தமிழகம் முழுவதும் பா.ம.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. 

போதைப் பொருள்களின் விற்பனையை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். எதிர்கால தூண்களான இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி சீரழிந்து வருகின்றனர்.

பள்ளி வளாகம் அருகே போதைப் பொருள்கள் கிடைக்கிறது. கைக்கு எட்டிய தூரத்தில் மாணவர்களுக்கு கிடைக்கும் போதைப் பொருளால் ஒரு தலைமுறையே அழிந்து வருகிறது.

இதேபோல், மதுக்கடைகளால் தமிழ்நாடு சுடுகாடாக மாறி வருகிறது. தமிழகத்தில் நடக்கும் இந்த போதை வணிகத்தைத் தடுக்க வேண்டும்" என்று அன்புமணி இராமதாஸ் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Anbumani Ramadoss Speech in PMK Protest july


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->