எடப்பாடி பழனிசாமியையும், ஓ.பன்னீர்செல்வத்தையும் நம்பி நாங்கள் இல்லை - அமைச்சர் துரைமுருகன் பேட்டி.!
Duraimurugan say about ops vs eps admk
வேலூரில் புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்தின் பணிகள் தற்போது முழுமை அடைந்துவிட்டதால், இன்று முதல் வேலூர் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதற்கான விழாவில் தி.மு.கா.வின் பொதுச்செயலாளரும் மூத்த அமைச்சருமான துரைமுருகன் பங்கேற்றார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்துள்ளதாவது,
அ.தி.மு.க தலைமைக் கழகம் சீல் வைப்புக்கும் தி.மு.க.வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எடப்பாடி பழனிசாமியையும், ஓ.பன்னீர்செல்வத்தையும் நம்பி தி.மு.க கிடையாது. அவர்கள் இருவரது ஆதரவும் எங்களுக்கு தேவை இல்லை.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா அழைப்பிதழில் அரசு விதிமுறைப்படி பெயர்கள் போட்டிருக்க வேண்டும். மேலும், தமிழக ஆளுநர் ரவி சனாதன தர்மம் பற்றி பேசி வருவதால் அவர் சனாதன வாதி." என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
English Summary
Duraimurugan say about ops vs eps admk