திட்டமிட்டு பழி வாங்கும் செயல் - கொந்தளிப்பில் எடப்பாடி கே பழனிச்சாமி.! - Seithipunal
Seithipunal



அதிமுக முன்னாள் எம்எல்ஏ கே.பி.பி .பாஸ்கர் மற்றும் அவருக்கு சொந்தமான 26 இடங்களில், இன்று காலை முதல்  லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர் 

நாமக்கல் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே .பி.பி .பாஸ்கர் மற்றும் அவருக்கு சொந்தமான 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். 

நாமக்கல்லில் மட்டும் 24 இடங்களிலும், மதுரை, திருப்பூரில் தலா ஒரு இடம் என 26 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

கே .பி.பி .பாஸ்கர் பணி காலத்தில் வருமானத்திற்கு அதிகமாகரூ.4.72 கோடி மதிப்பிலான சொத்துக்களை சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்து சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி கே பழனிச்சாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், 

"திட்டமிட்டு அரசியல் பழி வாங்கும் நோக்கத்தோடு, இந்த விடியா அரசு, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நாமக்கல் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.கே.பி.பி. பாஸ்கர் அவர்கள் வீட்டிலும், அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களது வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்துவது கண்டிக்கத்தக்கது" என்று தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

eps condemn to ex mla home raid


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->