எம்ஜிஆரை புகழும் ஸ்டாலின் விரைவில் அதிமுகவில் இணைந்து விடுவார்..!! - Seithipunal
Seithipunal


சேலம் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஏ.வி. ராஜுவின் சுயசரிதை நூல் வெளியீட்டு விழாவில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் "தற்போதைய முதல்வருக்கு நாட்டு மக்களின் பிரச்சனை பற்றி கவலை இல்லை, வீட்டு மக்களை பற்றி தான் கவலை அதிகமாக உள்ளது. 

தனது குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களுக்கு எந்த பதவி கொடுக்கலாம் அவர்களை வைத்து எவ்வாறு வருமானம் பெருக்கலாம் என்று திட்டம் தீட்டுவதிலேயே அவர் யோசனை உள்ளது. அதிமுகவை என்றுமே தொண்டர்கள் தான் வழிநடத்தி செல்கிறார்கள். ஆனால் திமுகவை அதிமுகவிலிருந்து சென்ற எட்டு பேர் வழிநடத்துகின்றனர். அதிமுகவில் இருந்து வருபவர்களுக்கு திமுக உடனே பதவி வழங்கிவிடும். பல ஆண்டு காலமாக திமுகவில் உழைப்பவர்களுக்கு எந்த பதவியும் வழங்குவதில்லை.

அதையும் மீறி பதவி வழங்க வேண்டும் என்றால் அவர்களுக்கு கல்லா காட்டினால் தான் பதவி கிடைக்கும். தற்பொழுது ஸ்டாலின் எம்ஜிஆர் புகழை பேச ஆரம்பித்து விட்டார். அதனால் கூடிய விரைவில் ஸ்டாலின் அதிமுகவில் இணைவார். எம்ஜிஆரின் பெயர் சொன்னால் தான் வாக்கு கிடைக்கும் என்ற மனநிலைக்கு ஸ்டாலின் இறங்கி விட்டதால் எங்கு பார்த்தாலும் எம்ஜிஆரின் புகழை பாடி வருகிறார். எம்ஜிஆரின் புகழை ஸ்டாலின் பாடுவது அதிமுகவுக்கு கிடைத்த வெற்றி" என எடப்பாடி பழனிச்சாமி பேசியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

EPS said Stalin will join AIADMK as soon as possible


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->