ஊழல்களுக்கு தலைவராகும் உதயநிதி..!! கார்ப்பரேட் கம்பெனி சி.இ.ஓ.,வுக்கு முடி சூட்டு விழா..!! உதயநிதியை ரவுண்டு கட்டிய இ.பி.எஸ்..!! - Seithipunal
Seithipunal


தமிழக அரசை கண்டித்து சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.

ஆர்ப்பாட்டத்தின் போது மேடையில் பேசிய அவர் "தமிழகத்தின் ஒட்டுமொத்த மக்களின் குரலாக அதிமுக இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறது. நாளைய தினம் தமிழகத்தின் தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலினுக்கு முடி சூட்டு விழா நடைபெறுகிறது. மிகப்பெரிய தியாகத்தை செய்த செம்மல், நாட்டுக்காக உழைத்த மாபெரும் மனிதர் திரு.உதயநிதி ஸ்டாலினுக்கு நாளை முடி சூட்டு விழா நடைபெறுகிறது.

திமுகவில் தமிழக முதலமைச்சராக முன்பு கருணாநிதி இருந்தார். பிறகு மு.க ஸ்டாலின் முதலமைச்சரானார். தற்பொழுது உதயநிதியை திமுகவின் முன்னணி தலைவராக கொண்டு வருவதற்கான முன்னோட்டம் தான் நாளை நடைபெறுகின்ற முடி சூட்டு விழா. திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி அதன் சி.இ.ஓ.,வுக்கு நாளை முடிச்சு விட்டு விழா நடைபெறுகிறது. நாளைக்கு உதயநிதி அமைச்சராகி விட்டால் தமிழ்நாட்டில் பாலாறும் தேனாறும் ஓட போகிறதா? 

திமுக ஆட்சியில் ஏற்கனவே அனைத்து துறைகளிலும் ஊழல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வந்தால் அந்த ஊழல்களுக்கெல்லாம் தலைவராக இருந்து செயல்படுவார். அது ஒன்று மட்டும்தான் நடக்கும். திமுகவின் குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும். வாரிசு அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும். ஏனென்றால் நாட்டு மக்களுக்கு எந்த ஒரு நன்மையும் கிடைக்காத ஒரே ஆட்சி என்றால் அது திமுகவின் ஆட்சி மட்டும் தான்" என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

EPS strongly criticized udhayanithi takes as Minister post


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->