ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: தொடங்கியது வாக்குப்பதிவு! வாக்களிக்கும் 256 பேர்! - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு வரும் மாதம் 5-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது, 8-ம் தேதி வாக்கு எண்ணிக்கைக் நடைபெற உள்ளது.

இரு தின்ணங்களுக்கு முன் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, மொத்தம் 46 பேர் இந்த தேர்தலில் போட்டியிடுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  

களத்தில் திமுக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனர். 

46 பேர் களத்தில் நின்றாலும் திமுக, நாம் தமிழர் கட்சி இடையேயான இருமுனை போட்டியாக இந்த தேர்தல் அமைந்துள்ளது.

இந்நிலையில், இன்று காலை முதல் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப்பதிவு தொடங்கி உள்ளது.

இந்த இடைத்தேர்தலில் தபால் வாக்களிக்க மொத்தம் 256 பேர் முன்பதிவு செய்துள்ள நிலையில், அவர்களுக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

erode by election postal vote


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->