2026ல் திமுக வேஷம் கலையும்! கத்தியை தூக்கி காண்பித்த தமிழிசை! - Seithipunal
Seithipunal


2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுகவின் வேஷம் கலையும் என முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

நேற்று பாஜக சார்பில் திரு ஒற்றியூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் கவர்னர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டார். கலந்துகொண்டு மக்கள் இடையே தமிழிசை சௌந்தரராஜன் பேசியதாவது,

சூரியன் உதிக்கிறது இல்லையோ? இலைகள் துடிக்கிறதோ இல்லையோ? கைகள் உயர்கிறதோ இல்லையோ? தாமரை மலர்ந்தே தீரும். மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டுள்ளதாக திமுக கூறிவருகிறது. தமிழ்நாட்டில் உள்ள 40 எம்பிக்களும் மத்திய பட்ஜெட்டை காண்பித்து போராட்டம் நடத்தப் போகிறார்கள். அது மட்டும் தான் அவர்களால் முடியும். 

பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் வெற்றி பெற்றிருந்தால் உரிமையோடு பல திட்டங்களை கேட்டு பெற்று தந்திருக்க முடியும். மின் கட்டண உயர்வு பால் கட்டண உயர்வு என்கிறார்கள் ஆனால் இன்று நீங்கள் பல மடங்கு உயர்த்தி இருக்கிறீர்கள் இதற்கு என்ன சொல்லப் போகிறீர்கள் தமிழிசை சௌந்தர்ராஜன் தமிழக அரசு குறித்து கேள்வி எழுப்பினார்.

பின்னர் தொடர்ந்து பேசிய தமிழிசை சௌந்தரராஜன் திமுகவின் வேஷம் நிச்சயம் 2026 சட்டமன்ற தேர்தலில் கலையும் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Former Governor Tamilisai Soundararajan says DMK disguise in 2026 assembly elections


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->