சட்டப்படி நேர்மையாக நடந்த டிஎஸ்பி மீது லாரி ஏற்றி கொடூரமாக கொலை.! - Seithipunal
Seithipunal


ஹரியாணா மாநிலம், நுஹ் மாவட்டத்தில் உள்ள அரவல்லி மலைப் பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக சுரங்கத்திலிருந்து கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு வந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் இன்று காலை 11 மணியளவில் விசாரணைக்கு சென்றுள்ளனர்.

அப்போது, காவல் துறையினர் சுரங்கத்திலிருந்து கற்களை ஏற்றிச் சென்ற லாரியை நிறுத்த முயன்றுள்ளனர். இதில் காவல் கண்காணிப்பாளர் சுரேந்திர் சிங் மீது லாரி மோதி உள்ளது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 

இந்த தொடர்பாக ஹரியாணா காவல்துறை டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது,

"காவல் கண்காணிப்பாளர் சுரேந்தர் சிங் பணியில் இருக்கும் போது உயிரிழந்துள்ளார். அவரது குடும்பத்தினருக்கு ஹரியானா காவல்துறை ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. குற்றவாளிகள் கட்டாயமாக நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள்". என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, பணியில் இருக்கும் போது உயிரிழந்த காவல் கண்காணிப்பாளர் சுரேந்தர் சிங்கின் குடும்பத்திற்கு ரூபாய் ஒரு கோடி நிவாரணமாக வழங்கப்படும் என்று மாநில உள்துறை அமைச்சர் அனில் விஜ் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Haryana honest DSP killed a lorry


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->