அதிரடி பேச்சு!!!இவர்கள் கொடுத்தால் சரியான வழக்கு, மற்றவர்கள் கொடுத்தால் பொய்யா? - EPS
if they give valid case if others give it lie EPS
சட்டசபையில் அ.தி.மு.க. கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது.இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் தெரிவித்திருந்ததாவது,"4.5 லட்சம் கோடி கடன் வாங்கியும் எந்த புதிய திட்டமும் அறிவிக்கப்படவில்லை. தங்கள் ஆட்சியின் மீதுள்ள குறைகளை மறைக்க அ.தி.மு.க.வில் உட்கட்சி பூசல் என பேசுகிறார் முதலமைச்சர்.
டாஸ்மாக்கில் 40 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் உங்கள் மீது தவறில்லை என்றால் அமலாக்கத்துறை வழக்கை எதிர்க்கொள்ளுங்கள்.
இவர்கள் தொடுத்தால் சரியான வழக்கு, மற்றவர்கள் தொடுத்தால் பொய்யா?"எனக் கேள்வி எழுப்பினார்.இந்த பதிலடி பேச்சு தற்போது அரசியல் ஆர்வாளர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
if they give valid case if others give it lie EPS