மோடி புகைப்படம் எங்கே? தடுப்பூசி போடும் இடத்தில் ரகளை.. அதிகாரிகளிடம் பாஜகவினர் வாக்குவாதம்.! - Seithipunal
Seithipunal


இளையான்குடி பகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ சுப.மதிஅரசன் இளையான்குடி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். 

அந்தப் புகாரில்,"இளையான்குடி பகுதியின் முன்னாள் எம்.எல்.ஏவாகவும், வடக்கு ஒன்றிய செயலாளராகவும் நான் பணியாற்றியுள்ளேன். கடந்த டிசம்பர் 4ஆம் தேதி சாலிகிராமம் பகுதியில் கொரோனா தடுப்பு முகாம் நடைபெற்றது.

அப்பொழுது அங்கு வைக்கப்பட்டிருந்த பேனரில் கலைஞர் மற்றும் ஸ்டாலின் புகைப்படம் இடம் பெற்று இருப்பதை கண்ட சாலைக்கிராமம் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த செல்ல கொடி மற்றும் கோவிந்தன் ஆகியோர் பிரதமர் மோடியின் புகைப்படம் எங்கே? 

அவரது புகைப்படம் பேனரில் ஏன் இடம்பெறவில்லை என்று கேள்வி எழுப்பினர். மேலும் தடுப்பூசி போட வந்த பொது மக்களை தடுத்து நிறுத்தி அவர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ரகளை செய்தனர்." என்று தெரிவித்துள்ளார். 

பாஜக நபர்கள் ரகளையில் ஈடுபட்டது குறித்து சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாகியது. இந்த சம்பவம் குறித்து இளையான்குடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ilaiyankudi bjp Admin makes problem


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->