இண்டியா கூட்டணி மதிப்பை இழந்து, தளர்ந்துவிட்டது - பிரதமர் மோடி!!
Indi alliance has lost value weakened PM Modi
ஐந்தாம் கட்டம் மக்களவை தேர்தலில் வாக்களித்த அனைத்து வாக்காளர்களுக்கும் நன்றி. இண்டி கூட்டணி 5ம் கட்ட தேர்தல் மதிப்பை இழந்து தளர்ந்துவிட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. அதன்படி, 102 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் கடந்த மாதம் 19ம் தேதியும், 88 தொகுதிகளுக்கு 2ம் கட்ட தேர்தல் கடந்த மாதம் 26ம் தேதியும், 93 தொகுதிகளுக்கு கடந்த 7ம் தேதி 3ம் கட்ட தேர்தலும், 96 தொகுதிகளுக்கு கடந்த 13ம் தேதி 4ம் கட்ட தேர்தலும், நேற்று 5ம் கட்ட தேர்தல் 49 தொகுதிக்கும் மக்களவை தேர்தல் வாக்கு பதிவு நடைபெற்று நிறைவடைந்துள்ளது.
நேற்று உ.பியில் 14, மகாராஷ்டிராவில் 13, மேற்கு வங்கதில் 7,பிஹார், ஒடிசா தலா 5, ஜார்க்கண்ட் 3, ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களில் தலா 1 என மொத்தம் 49 தொகுதிகளில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்தது.
இதில், ராகுல் காந்தி ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் முக்கிய வேட்பாளர்கள். ஐந்தாம் கட்டம் மக்களவைத் தேர்தலில் 60.9 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இன்று காலை பிரதமர் மோடி, சமூக வலைதள பக்கத்தில் கூறியுள்ளதாவது, ஐந்தாம் கட்ட மக்களவைத் தேர்தலில் வாக்களித்த அனைத்து வாக்காளர்களுக்கும் நன்றி. மத்தியில் வலுவான ஆட்சி தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை வேண்டும் என்றும் மக்கள் முடிவு செய்து விட்டனர். இந்த நிலையில் இந்தியா கூட்டணி வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடலாம். இந்திய மக்கள் மத்தியில் இந்தியா கூட்டணி மதிப்பை இழந்து தளர்ந்து விட்டது என்று கூறியுள்ளார்.
English Summary
Indi alliance has lost value weakened PM Modi