பாஜகவிடம் இருந்து இந்தியாவையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்க வேண்டும் - பிரியங்கா காந்தி ஆவேச பேச்சு.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் மக்களவை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்கு பதிவு வரும் வேப்பிலை 26ம் தேதி நடைபெற உள்ளது. இன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைய இருப்பதால் அனைத்து கட்சி தலைவர்களும் அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் வயநாடு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தேசிய தலைவர் ராகுல் காந்தியை ஆதரித்து பிரியங்கா காந்தி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பிரச்சாரக் கூட்டத்தில் பிரியங்கா காந்தி பேசுகையில்,

பாஜக ஆட்சியில் அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்காக உயர்ந்துள்ளது. இந்தியாவில் வேலையில்ல திண்டாட்டம் தலைவிரித்து ஆடுகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. உண்மையான பிரச்சனையிலிருந்து மக்களை திசை திருப்பும் நோக்கில் பிரதமர் மோடி ஈடுபட்டு வருகிறார். பாஜக ஆட்சியில் இருந்து இந்தியாவையும் ஜனநாயகத்தையும் பாதுகாப்பதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பு இதனைத் தவிரவிடாதீர்கள் என்று பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India and democracy save Priyanka Gandhi speech


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->