#INDvSA || இந்திய அணி ஆல்-அவுட்.! அரைசதத்தை கோட்டைவிட்ட அஷ்வின்.! மார்கோ அசத்தல் பந்துவீச்சு.! - Seithipunal
Seithipunal


இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. இதில், முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்தது. 

இதனை தொடர்ந்து 2வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியுள்ளது. டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது இந்திய அணியின் கேப்டன் கே எல் ராகுல், தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கினார். அவருடன் அதிரடி ஆட்டக்காரர் மயங்க் அகர்வால் களமிறங்கினார்.

22 ரன்னுக்கு மயங்க் அகர்வால் தனது விக்கெட்டை பறிகொடுக்க, அடுத்து வந்த புஜாரா மூன்று ரன்களுக்கும், அஜிங்கிய ரஹானே ரன் ஏதும் எடுக்காமல் முதல் பந்திலேயே தனது விக்கெட்டை பறிகொடுத்தது அதிர்ச்சி கொடுத்தனர்.

அதனை தொடர்ந்து களமிறங்கிய ஹனுமா விஹாரி சிறிது நேரம் நிலைத்து நின்று ஆட, அவரும் 20 ரன்களுக்கு தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் 17 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த கே எல் ராகுல் தனது அரை சதத்துடன் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

இதனையடுத்து தமிழகத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் அதிரடி ஆட்டத்தால் டெஸ்ட் மேட்சை, ஒன் டே மேட்ச் போல் ஆட, அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்த்தால், 50 பந்துகளில், 6 பவுண்டரிகளுடன், 46 ரன்னுக்கு தனது வபறிகொடுத்தார்.

இறுதியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்க்சில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 202 ரன்களை மட்டுமே சேர்த்தது. தென்ஆப்பிரிக்க அணியின் பந்துவீச்சை பொறுத்தவரை, ஜான்சன் அசத்தலாக பந்து வீசி 4 விக்கெட்களை எடுத்தார். ஒளிவியர் மற்றும் ரபடா தலா 3 விக்கெட்டுகளை கைபற்றினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

INDvSA Second Test IND First Innings


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->