#BREAKING || வன்மத்தை கக்கிய ஜெய்பீம் சூர்யா, ஜோதிகா, இயக்குனர் ஞானவேல் மீது வழக்கு பதிவு செய்தது போலீஸ்.!
jai bhim polise case file may
ஜெய்பீம் பட விவகாரம் தொடர்பாக வேளச்சேரி காவல் நிலையத்தில் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தேச ஒற்றுமையை சீர்குலைக்கும் நோக்கத்தில் ஜெய்பீம் படத்தில் காட்சி அமைக்கப்பட்டுள்ளதாக, படத்தின் தயாரிப்பாளர்கள் சூர்யா, ஜோதிகா, இயக்குனர் ஞானவேல் மீது, ருத்ர வன்னியர் சேனா அமைப்பின் நிறுவன தலைவர் சந்தோஷ் நாயகர் புகார் அளித்து இருந்தார்.
அவரின் புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று, சென்னை சைதாபேட்டை நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றியும் தொடர்ந்திருந்தார்.
இங்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம், புகார் மீது 5 நாட்களில் வழக்குப் பதிவு செய்ய வேளச்சேரி காவல்நிலைய ஆய்வாளருக்கு உத்தரவு பிறப்பித்து இருந்தது. மேலும், முதல் தகவல் அறிக்கையை மே 20ல் தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது.
இந்நிலையில், ஜெய் பீம் படக்குழுவினர் மற்றும் தயாரிப்பாளர் மீது வேளச்சேரி காவல் நிலையம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இரு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
வேளச்சேரி காவல் ஆய்வாளருக்கு வழக்குப்பதிவு செய்யக் கோரி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
English Summary
jai bhim polise case file may