அடுத்தடுத்து நடக்கும் கொடூரம் - தூத்துக்குடியில் கஞ்சா பயன்படுத்திய இளைஞர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடியில் அளவுக்கதிகமாக கஞ்சா பயன்படுத்திய இளைஞர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மீளவிட்டான் வி.எம்.எஸ்., நகர் ரயில்வே தண்டவாளத்தில் ஒரு வாலிபர் சடலம் கிடப்பதாக இருப்பு பாதை காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.

அதன் படி போலீசார் அங்கு விரைந்து சென்று இளைஞரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது தொடர்பாக நடத்திய முதற்கட்ட விசாரணையில், அவர் தூத்துக்குடி மகிழ்ச்சிபுரம் பத்திரகாளி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சரவணன் மகன் சக்திவேல் என்பது தெரியவந்தது. 

இவர் கடல் தொழிலுக்கு சென்று வந்துள்ளார். கஞ்சா பழக்கம் இருந்ததால் அவரது தாயார் அவரை திட்டியதனால் மனவேதனை அடைந்த அவர், அளவுக்கு அதிகமாக கஞ்சா அடித்துவிட்டு தண்டவாளத்தில் படுத்துள்ளார். 

பின்னர் சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்தது தெரிய வந்தது. இந்தச் சம்பவம் குறித்து தூத்துக்குடி இருப்பு பாதை காவல் நிலையத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தமிழகத்தில் மூன்றாவது சம்பவம் ஆகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

youth died use kanja in thothukudi


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->