ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி. தினகரனுக்கு அதிமுகவில் இடமில்லை - ஜெயக்குமார்! - Seithipunal
Seithipunal


ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி. தினகரன் ஆகியோருக்கு அதிமுகவில்  இடமில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் தெரிவித்துள்ளதாவது,

"ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் கோடிக்கணக்கில் பணம் வைத்துள்ளனர். பணம் பாதாளம் வரை பாய்கிறது. அவர்கள் பணத்தை வைத்து ஆள் பிடிக்கும் வேலையை செய்து வருகின்றனர்.

சட்டப்பேரவை உறுப்பினர்கள் அணி மாறுவதால் அதிமுகவுக்கு பின்னடைவு ஏற்படாது. ஓ.பன்னீர்செல்வத்தின் நடிப்பு ஆஸ்கரையே மிஞ்சிவிடும். அரசியலை விட்டு நடிப்புக்கு வந்திருந்தால் சிவாஜியையே தோற்கடித்திருப்பார்". என்று விமர்சித்துள்ளார்.

இதனை தொடர்ந்து, கறந்த பால் மடி புகாது, கருவாடு மீனாகாது என்ற பழமொழியை சுட்டிக்காட்டி, அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, தினகரன் ஆகியோருக்கு அதிமுகவில் இடம் இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

jayakumar say about admk ops ttv sasikala


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->