"இது பொய்க் குற்றச்சாட்டு ... சதித் திட்டம்.. " - சிறையில் வெளியே வந்த சோரன் கருத்து..! - Seithipunal
Seithipunal



ஜார்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவருமான ஹேமந்த் சோரன் நில மோசடி வழக்கில் கடந்த ஜனவரி 31 ம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப் பட்டார். இந்நிலையில் ஜார்கண்ட் மாநில உயர் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி உள்ளது.

இதையடுத்து சிறையில் இருந்து வெளியே வந்துள்ள ஹேமந்த் சோரன் தான் சிறையில் இருந்தது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அப்போது அவர் பேசுகையில், "நான் சதியால் தான் பாதிக்கப் பட்டுள்ளேன். எனக்கு எதிராக சதித் திட்டம், மற்றும் பொய்க் குற்றச்சாட்டுகள் சுமத்தி என்னை 5 மாதங்கள் சிறையில் இருக்க வைத்துள்ளனர். ஆனால் நீதிமன்றம் என்னை வெளியே அனுப்பி உள்ளது" என்று தெரிவித்திருந்தார். 

முன்னதாக இந்த வழக்கின் வாதங்கள் ஜூன் 13ம் தேதி முடிந்தவடைந்த நிலையில் வழக்கின் உத்தரவு ஒத்தி வைக்கப் பட்டிருந்தது. இதையடுத்து நேற்று ஹேமந்த் சோரனுக்கு இரண்டு பேரின் உத்தரவாதத்துடன் தலா 50 ஆயிரம் பிணைத் தொகையுடன் ஜாமீன் வழங்கப் பட்டுள்ளது. 

ஜாமீனில் இருக்கும் போது மனு தாரர் எந்த குற்றமும் செய்ய  வாய்ப்பில்லை. மேலும் முதன்மைப் பார்வையில் அவர் குற்றவாளி அல்ல என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதையடுத்து சட்ட நடைமுறைகள் அனைத்தும் முடிவடைந்து நேற்று மாலை சுமார் 4 மணியளவில் ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் சிறையில் இருந்து வெளியே வந்தார். அவரை ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சித் தொண்டர்கள் உற்சாக கோஷமிட்டு வரவேற்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Jharghand Former CM Hemant Soren Speaks After Getting Bail


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->