#Breaking | அம்பேத்கர் சிலைக்கு காவி துண்டு.! சாலையில் உருண்டு பிரண்டு போராட்டம் செய்த சிறுத்தைகள்.! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம் மின்வாரிய அலுவலகத்தில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு, சில மர்ம நபர்கள் காவி துண்டை அணிவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் : தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகத்தில் அமைந்துள்ள 6 அடி உயரம் கொண்ட அம்பேத்கர் சிலையில், இன்று காலை சில மர்ம நபர்கள் காவி துண்டை அணிவித்து சென்றுள்ளனர்.

இதனைக் கண்ட விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த நபர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். மேலும் காவிதுண்டு அணிவித்தவர்களை கைது செய்ய வேண்டும் என்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அம்பேத்கர் சிலை மீது இருந்த காவித் துண்டை அகற்றினர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தை கட்சியினரிடம் சமாதானம் பேசினர்.

மேலும், அருகில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் காவித்துண்டை அணிவித்தவர் யார் என்பது குறித்து விசாரணை செய்யப்படும் என்ற உறுதியையும் காவல்துறையினர் அளித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kanjipuram saffron dress for statue of Ambedkar


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->