காவேரி விவகாரத்தை கர்நாடக காங்கிரஸ் அரசியலுக்காக பேசிவருகிறது - செல்வப்பெருந்தகை!!
Karnataka Congress is talking Cauvery issue for politics - Selvaperunthagai
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,குஜராத் மாநிலத்தில் உள்ள கடற்பகுதியில் அதிக அளவில் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் மட்டுமல்ல தமிழ்நாட்டிலும் போதைப் பொருட்களால் இளைஞர்கள் சீர் அழிவதற்கு காரணம் பாஜக தான். ஜாபர் சாதிக் கைது செய்ததை மட்டும் பேசும் பாஜக இது குறித்தும் பேச வேண்டும்.
காவிரி விவகாரத்தில் அரசியலுக்காக கர்நாடக காங்கிரஸ் பேசி வருகிறது. கர்நாடகா காங்கிரஸ் கட்சிக்கு எதிராக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி போராட தயாராக உள்ளது என்று பேசினார்.
English Summary
Karnataka Congress is talking Cauvery issue for politics - Selvaperunthagai