ஈஷா மகா சிவராத்திரி: விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்தார் கர்நாடகா துணை முதல்வர்! - Seithipunal
Seithipunal


கர்நாடகாவின் துணை முதல்வர் சிவகுமார், சமீபத்திய கோவை ஈஷா யோகா மையத்தில் நடந்த மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்று வழிபட்டார். இந்த விழாவில் உள்துறை அமைச்சரான அமித்ஷாவும் பங்கேற்று இருந்தார்.

சத்குரு நடத்திய விழாவில் அமைச்சர் பங்கேற்றபோது சிவக்குமார் அவர்களும் பங்கேற்றது தவறு என்று காங்கிரஸ் எதிர்க்கட்சியினர்  புகார் புரளிகளை கிளப்ப ஆரம்பித்தனர். மேலும் இதில் அவர் ஆர்.எஸ்.எஸ்க்கு நெருக்கமாகிவிட்டார் என்றும் பல வதந்திகள் கிளப்பி இதனை ஒரு பெரிய குற்றமாக காங்கிரஸ் எதிர்க்கட்சி கவிழ்க  ஆரம்பித்தனர்.


துணை முதல்வர் சிவகுமார்:

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் துணை முதல்வர் சிவகுமார் கூறியதாவது, " ஈஷா யோகா சத்குரு கர்நாடகாவைச் சேர்ந்தவர். அவர்காகவே  காவேரி நீர் விவகாரத்துக்காகத் தொடர்ந்து குரல் கொடுப்பவர். அவர் நேரடியாக வந்து எனக்கு அழைப்பு விடுத்தார். மேலும் ஏராளமானோர் அவரை பின்தொடர்கின்றனர்.  சிறப்பான பல பணிகளை அவர் செய்து கொண்டிருக்கிறார். அந்த விழாவில் பல எம்.எல்.ஏக்கள் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். அதனால் நானும் பங்கேற்றேன். அது என் தனிப்பட்ட நம்பிக்கை சார்ந்த விருப்பம். என் தொகுதியில் உள்ள மக்கள் 100 அடி உயரத்தில் 'ஏசுநாதர் சிலை' நிறுவினர். உடனே பா.ஜ.க கட்சியினர் என்னை 'இயேசு குமாரா' என்று கூறினார். நான் அனைத்து மதங்களையும் நம்புகிறேன்.

காங்கிரஸ் கட்சி:

அனைத்து சமூகத்தினரையும் விரும்புகிறேன். காங்கிரஸ் கட்சியின் கொள்கையானது சமூகத்தின் அனைத்து பிரிவினரையும் அரவணைப்பதே. எனவேதான் நான் அந்த விழாவில் பங்கேற்றேன். சிலருக்கு அது பிடிக்கும், சிலருக்கு பிடிக்காமல் போகலாம்" என அவர் தெரிவித்திருந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Karnataka Deputy Chief Minister responded to criticism


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->