#இந்தியா || காலைலயே அரங்கேறிய பெரும் சோகம்.. ஆற்றில் கவிழ்ந்த பேருந்து., மூச்சு திணறி பலியான13 பேர்.! - Seithipunal
Seithipunal



மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இருந்து மராட்டிய மாநிலம் புனேவுக்கு இன்று காலை பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. 

தார் மாவட்டம் கல்கோட்டில் உள்ள நர்மதை ஆற்று பாலத்தில் பேருந்து வந்த எதிர்பாராத விதமாக  கட்டுப்பாட்டை இழந்து 100 அடி உயர பாலத்திலிருந்து ஆற்றுக்குள்  கவிழ்ந்தது. இந்த பேருந்தில் பயணம் செய்தவர்கள் வெளியே வர முடியாமல் சிக்கி தவித்துள்ளனர்.

இதனை கண்ட அப்பகுதியினர்  ஓடிவந்து அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும், காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஆற்றில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 

பேருந்து ஆற்றில் மூழ்கியதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 15 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். பேருந்தில் எத்தனை பேர் பயணம் செய்தார்கள் என்ற விவரம் தெரியப்படவில்லை. தீயணைப்பு துறையினர் பேருந்தை மீட்டு வெளியில் கொண்டு வந்துள்ளனர். 

பேருந்தில் பயணம் செய்த பல பேர் காணப்படவில்லை. அவர்கள் நீரில் மூழ்கி இறந்து இருக்கலாம் என கருதப்படுகிறது. இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடந்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madhya Pradesh bus accident july


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->