சாதி, மத ஒழிப்பு போராளிகளுக்கு இன்ப செய்தி - சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு.!
non caste certificate cage chennai hc order
சாதி, மதமற்றவர் சான்றிதழ் கோரிய விண்ணப்பதாரருக்கு இரு வாரங்களுக்குள் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை அண்ணாநகரை சேர்ந்தவர் மனோஜ் குமார். இவர் தனது மகன் யுவன் மனோஜுக்கு, சாதி, மதம் அற்றவர் என்ற சான்றிதழ் வாங்க முடிவு செய்தார்.
இதற்காக, அம்பத்தூர் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பம் அளிக்கவே, மனோஜ் கோரியபடி சாதி, மதம் அற்றவர் என்ற சான்றிதழை அம்பத்தூர் தாசில்தார் வழங்கவில்லை.
இதனையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனோஜ் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை இன்று விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம், சாதி, மதம் இல்லை என்ற சான்றிதழ் கோரி விண்ணப்பித்தவருக்கு இரண்டு வாரங்களில் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
சாதி, மதத்தை ஒழிக்க போராடும் அரசியல் கட்சிகளும், புரட்சி போராளிகளும் மனோஜ் குமார் போல தங்களின் வாரிசுகளின் ஆவணங்களில் இருந்து சாதி மதத்தை ஒழிக்க முன்வரலாமே என்று, சாதி, மத பற்றுள்ளவர்கள் சமூகவலைத்தளங்களில் கேள்வி எழுப்பு வருகின்றனர்.
English Summary
non caste certificate cage chennai hc order