துணை முதலமைச்சர் முன்னிலையில் திமுகவில் இணைந்த நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள்..! - Seithipunal
Seithipunal


நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் சிலர் திமுகவில் இணைந்துள்ளனர்.  நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீப காலமாக பெரியார் குறித்து அவதூறாக பேசி வருகிறார். இதனால், சீமான் மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக கடந்த சில மாதங்களாக அக்கட்சியின் நிர்வாகிகள் விலகி பிற கட்சிகளில் இணைந்து வருகின்றனர்.

பெரியார் குறித்து சீமான் பேசி வருவது அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அதனை தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு நாதகவில் இருந்து சுமார் 3000 நிர்வாகிகள் விலகி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

இந்நிலையில், இன்று அரியலூர் மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் 12 பேர் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

NTK Members executives joined DMK in the presence of the Deputy Chief Minister


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->