ஓ. பன்னீர்செல்வத்துக்கு எதிரான தேர்தல் வழக்கு நிராகரிப்பு.!! - Seithipunal
Seithipunal


கடந்த ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலின் போது போடிநாயக்கனூர் தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த வெற்றியை எதிர்த்து போடிநாயக்கனூர் தொகுதி வாக்காளர் மிலானி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார். 

அந்த வழக்கில் ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்த வேட்புமனுவில் சொத்துக்கள், கடன் விவரங்களை மறைத்து உள்ளதாகவும், வேட்பு மனுவை ஏற்றது சட்டவிரோதமானது என தெரிவித்திருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. 

இதனை தொடர்ந்து கடந்த மாதம் இவ்வழக்கை நிராகரிக்கக்கோரி ஓ பன்னீர்செல்வம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் தேர்தல் வழக்கு நிகராக கோரி ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. 

இந்நிலையில், இன்று இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அதிமுக ஒருங்கிணைப்பு பன்னீர்செல்வத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ops election case


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->