இந்த சமயத்தில் இந்தியாவில் வலுவான அரசு தான் அவசியம் - மோடி பரபரப்பு பேச்சு.! - Seithipunal
Seithipunal


பா.ஜ.க தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பிரதமர் நரேந்திர மோடி பேசி இருப்பதாவது, இன்று மிகவும் புனிதமான நாள். நாட்டில் பல்வேறு மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. அண்ணல் அம்பேத்கருக்கு இன்று பிறந்த நாள். 

இந்த சிறப்பான நாளில் பா.ஜ.க தேர்தல் அறிக்கை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி. வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்கும் விதமாக பா.ஜ.க தேர்தல் அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் பல்வேறு தரப்பு மக்களிடமும் கருத்துக்கள் கேட்ட பிறகு இந்த அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது. வரும் ஆண்டுகளில் ஊழலை ஒழிக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 

உலகம் முழுவதும் தற்போது போர் பதற்றம் நிலவி வருவதால் இந்தியாவில் வலுவான அரசு அமைக்க வேண்டியது அவசியமானதாகும். 

மத்தியில் வலுவான அரசு அமைந்தால்தான் வெளிநாடு வாழ் இந்தியர்கள் சிறப்பாக வாழ முடியும். நாட்டின் பொருளாதாரத்தையும் வலுப்படுத்த முடியும். அதற்கு மக்கள் மத்தியில் வலுவான அரசை மீண்டும் உருவாக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

PM Modi viral speech


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->