கொந்தளித்த திமுக நிர்வாகிகள்., அசால்ட்டாக சம்பவம் செய்த அதிமுக எம்எல்ஏ! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த கேளூர் கிராம தனியார் திருமணம் மண்டபம் ஒன்றில், சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில், 150 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.

போளூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. 

நிகழ்ச்சி தொடங்குவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பே வந்த போளூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் திமுக, அதிமுக நிர்வாகிகள், எம்எல்ஏவின் வருகைக்காக காத்திருந்தனர்.

ஆனால் எம்.எல்.ஏ அக்ரி கிருஷ்ணமூர்த்தி இரண்டு மணி நேரம் தாமதமாக வந்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

அப்போது, சுமார் இரண்டு மணி நேரம் காத்திருந்த திமுக ஒன்றிய சேர்மன் மற்றும் திமுக நிர்வாகிகளை அழைக்காமல் எம்எல்ஏ அக்ரி கிருஷ்ணமூர்த்தி நிகழ்ச்சியை தொடங்கியதாக சொல்லப்படுகிறது.

இதனால் வருத்தம் அடைந்த திமுக நிர்வாகி மற்றும் சேர்மன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அதிமுக எம்எல்ஏ அக்ரி கிருஷ்ணமூர்த்தி திமுக நிர்வாகிகளை சமாதானப்படுத்தி நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தினார்.

திமுக நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் நிகழ்ச்சியில் பரபரப்பு ஏற்பட்டது. அதே சமயத்தில் அதிமுக எம்எல்ஏ பொறுமையாக விவகாரத்தை கையாண்டு நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தியதும் மக்களால் பாராட்டப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Polur ADMK MlA DMk Members


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->