ஆளுநர் மாளிகை அருகே இருசக்கர வாகனம் திருட்டு.! - Seithipunal
Seithipunal


புதுவை ஆண்டியார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பழனி. இவர் புதுவை கவர்னர் மாளிகையில் சமையல் கலைஞராக பணியாற்றி வருகிறார். 

இந்த நிலையில் இன்று வழக்கம் போல் கவர்னர் மாளிகைக்கு பணிக்கு வந்த பழனி அவரது மோட்டார் சைக்கிளை நுழைவு வாயிலில் நிறுத்தி விட்டு பணியில் ஈடுபட்டார். 

பின்னர் பணி முடிந்து வெளியே வந்து பார்த்த போது அவரது மோட்டார் சைக்கிளை காணவில்லை. அதிர்ச்சி அடைந்த பழனி இது குறித்து கவர்னர் மாளிகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த காவல்துறையினரின் தெரிவித்தார். அவர்கள் அங்குள்ள சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்தனர். 

அதில் இரண்டு வாலிபர்கள் பழனியின் மோட்டார் சைக்கிளை திருடி செல்வது பதிவாகியிருந்தது. இதனை தொடர்ந்து பழனி சி.சி.டி.வி காட்சிகளுடன் பெரிய கடை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Puducherry Twowheeler stolen near Governors House


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->