இது பாஜகவின் அராஜகம்.. வீடியோ எடுத்து போடுங்க.. அமைச்சர் சேகர்பாபு பேச்சால் பரபரப்பு..!! - Seithipunal
Seithipunal


இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் "பாஜகவின் தேசிய தலைவர் ஜெ.பி நட்டா வருகைக்காக ஆகம விதியை மீறி கோவையில் உள்ள கோவிலின் நடையை 12 மணிக்கு மேல் வரை திறந்து வைத்ததாக புகார் வந்துள்ளது. பாஜகவினரின் அராஜக போக்கை ஊடகங்கள் படம் பிடித்து பொது மக்களுக்கு காட்ட வேண்டும்.

ஆகமம், ஆகமம் என்று வாய் நிறைய பேசுபவர்கள் தான் இப்படி ஆகம விதியை மீறி செயல்படுகின்றனர். இதனை வீடியோ எடுத்து மக்கள் மன்றத்தில் ஊடகங்கள் போட்டு காட்ட வேண்டும். தமிழகத்தில் ஏதாவது ஒரு வகையில் வன்முறையை கட்டவிழ்த்து விட வேண்டும் என்று பாஜக கணக்கு போட்டு செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது. வன்முறைக்கு ஏற்ற மாநிலம் தமிழ்நாடு அல்ல. அதற்கு ஏற்ற தமிழக முதல்வர் தளபதி மு.க ஸ்டாலின் அல்ல.

இது முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் அமைந்த திராவிட மாடல் ஆட்சி நடைபெற்று கொண்டு இருக்கிறது. வன்முறைக்கு சிறிதும் இடம் தர மாட்டார்.  எந்த சூழ்நிலையில் வேண்டுமானாலும், எந்த அளவிற்கு சென்றும் வன்முறையாளர்களை ஒடுக்குவதற்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தயங்க மாட்டார்" என செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் சேகர்பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sekarbabu said BJP do not follow Agama rules


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->