தமிழக முதல்வர் போல் உதயநிதி ஸ்டாலின் செயல்படுகிறார்..!! செல்லூர் ராஜு கடும் விமர்சனம்..!!
Sellur Raju critized Udhayanidhi as Chief Minister of Tamil Nadu
திமுக அரசை கண்டித்து மதுரை மாநகரில் அதிமுக சார்பில் வரும் 13ஆம் தேதி நடைபெற உள்ள ஆர்ப்பாட்டம் குறித்தான ஆலோசனைக் கூட்டம் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் மதுரை மாநகர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு திமுகவை கடுமையாக விமர்சனம் செய்தார்.
அப்போது பேசிய அவர் "உதயநிதி அமைச்சராக நியமனம் செய்ய உள்ளதாக செய்திகள் வெளி வருகின்றன. திமுகவுக்கு சட்டப்பேரவையில் பெரும்பான்மையாக உள்ளது. முதல்வர் ஸ்டாலின் யாரை வேண்டுமானாலும் அமைச்சராக்கலாம். திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி. அது ஒரு குடும்ப கழகம். ஸ்டாலின் குடும்பத்தினர் தான் தலைவர்கள்.
உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக போகிறார் என்ற தகவல் பெரிய விஷயம் அல்ல. தற்போது தமிழக முதல்வர் போல் உதயநிதி ஸ்டாலின், ஸ்டாலின் மனைவி, மருமகன் ஆகியோர் செயல்படுகின்றனர். வெளிநாட்டு அதிபர்கள் தான் சொகுசு ரயிலில் பயணம் மேற்கொள்வார்கள். பல லட்சம் ரூபாய் கொடுத்து சொகுசு ரயிலை ஸ்டாலின் முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்கிறார். மக்களின் வரிப்பணம் வீணாக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் எந்த வண்டியிலும் பயணம் மேற்கொள்ளலாம். அதற்கு திமுகவினர் கூச்சப்பட மாட்டார்கள். திமுக அமைச்சர்கள் மக்களுக்கு பயப்பட மாட்டார்கள்" என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
English Summary
Sellur Raju critized Udhayanidhi as Chief Minister of Tamil Nadu