தவெக மாநாட்டில் குடிநீர், உணவு தட்டுப்பாடு!...அடிக்கும் வெயிலுக்கு மயங்கி விழுந்த தொண்டர்கள்! - Seithipunal
Seithipunal


தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம்,  விக்கிரவாண்டி வி.சாலையில் இன்று மாலை நடைபெறுகிறது.

இந்த மாநாட்டின் பிரம்மாண்ட ஏற்பாடுகள் காரணமாக விழுப்புரம் மாவட்டமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
மேலும் மாநாட்டில் பங்கேற்பதற்காக தொண்டர்கள் இன்று அதிகாலை முதலே சாரை சாரையாக வரத்தொடங்கி உள்ளனர். குறிப்பாக கடலூர், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள், ரசிகர்கள், தொண்டர்கள் அதிகாலை முதலே குவிந்து வருகின்றனர்.,

மாநாட்டிற்கு அதிக கூட்டம் கூடுவார்கள் என்பதால், காலை 10 மணிக்கே மாநாட்டு திடல் திறக்கப்பட்டு உள்ளே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அதிகாலை முதலே தொண்டர்கள் மாநாட்டு திடலில் குவிந்த நிலையில், நேரம் செல்ல செல்ல வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

இதனால் அங்கு கூடியுள்ள தொண்டர்கள் குடிநீர் மற்றும் உணவு இன்றி தவித்தனர். இதையடுத்து போலீசார் அங்கிருந்த தொண்டர்களுக்கு தற்போது தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்து வருகின்றனர்.  மேலும் வெயிலின் தாக்கத்தால் சிலர் மயங்கி விழுந்த நிலையில் அவர்களுக்கு சிகிக்சை அளிக்கப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Shortage of drinking water food in the heat conference volunteers fainted due to the scorching sun


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->