டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் - உச்சநீதிமன்றம் உத்தரவு..!! - Seithipunal
Seithipunal



மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப் பட்டிருந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

டெல்லி யூனியன் பிரதேசத்தில் மதுபானக் கடைகளுக்கு உரிமம் வழங்கியதில் ரூ. 2800 கோடி வரை மோசடி நடந்துள்ளதாகக் கூறி அமலாக்கத்துறை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்து திகார் சிறையில் அடைத்தது. முன்னதாக இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை கெஜ்ரிவாலுக்கு 9 முறை சம்மன் அனுப்பியும், அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை என்று தெரிகிறது.

இதையடுத்து தான் கடந்த மார்ச் 21ம் தேதி கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து 3 மாதங்களாக சிறையில் இருக்கும் கெஜ்ரிவால், இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் இன்று நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபங்கர் தத்தா ஆகிய அமர்வு நீதிபதிகள் இந்த வழக்கில் தீர்ப்பளித்துள்ளனர். 

அந்த தீர்ப்பில் நீதிபதிகள் தெரிவித்திருப்பதாவது, "வெறும் விசாரணைக்காக மட்டுமே ஒருவரை கைது செய்வதை நாங்கள் அனுமதிக்க முடியாது. மேலும் பிணையில் இருக்கும்போது விசாரணை நடத்த முடியாது என்ற கருத்தையும் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. 

அவர் 90 நாட்களுக்கு மேல் சிறையில் இருந்திருக்கிறார். அவர் பிணையில் வருவதற்கும், அவரிடம் விசாரணை மேற்கொள்வதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில முதல்வருக்கு சில உரிமைகள் உள்ளன. அதை கருத்தில் கொண்டு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குகிறோம்" என்று உத்தரவிட்டுள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Supreme Court Granted Interim Bail to Delhi CM Arvind Kejriwal


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->