சிபிஐ வழக்கு : தமிழக அரசுக்கு செக்! உச்சநீதிமன்றம் ஓடிய அதிமுக! கேவியட் மனு தாக்கல்! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது.

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரண வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் பாட்டாளி மக்கள் கட்சி, பாஜக, அதிமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் வழக்கு தொடர்ந்து இருந்தனர்.

இந்த வழக்கின் விசாரணை பல்வேறு கட்டங்களாக நடந்து வந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கியது. அதன்படி, விஷச்சாராய மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் அதிமுக கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.

அதில், கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணம் தொடர்பான வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தமிழக அரசு தடை கோரி மேல்முறையீடு செய்தால், தங்களை கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்க கூடாது என்று அதிமுக இந்த கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளது.

இதேபோல் நேற்று பாஜகவும் கேவியட் மனுதாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Supreme Court of India Kallakurichi CBI ADMK BJP DMK Govt


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->