மாட்டுபொங்கல் அன்று சென்னை மாநகராட்சியில் இறைச்சிக் கூடங்களை மூட உத்தரவு! - Seithipunal
Seithipunal


திருவள்ளுவர் தினம் (15.01.2025) அன்று, சென்னை மாநகராட்சி நிர்வாகத்திற்கு உட்பட்ட இறைச்சிக் கூடங்கள் அரசு உத்தரவின்படி மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து  சென்னை மாநகராட்சி விடுத்துள்ள அறிவிப்பில் ,  "திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, வருகின்ற 15.01.2025 புதன்கிழமை அன்று பெருநகர சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இயங்கும் புளியந்தோப்பு, வில்லிவாக்கம், சைதாப்பேட்டை மற்றும் கள்ளிக்குப்பம் ஆகிய இறைச்சிக் கூடங்கள் அரசு உத்தரவின்படி மூடப்படவுள்ளன.

எனவே, இறைச்சிக் கடை வியாபாரிகள், பொதுமக்கள் அனைவரும் இந்த உத்தரவினை செயல்படுத்த முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது" என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Thiruvalluvar Day Chennai Corporation meet shop closed


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->