மின் கட்டண உயர்வை திரும்ப பெற கோரி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம் அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


மின் கட்டண உயர்வை திரும்ப பெற கோரி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் வருகின்ற 30 ஆம் தேதி அடையாள ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர். 

அக்கட்சியின் தலைவர் ஜி கே வாசன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் தமிழகம் முழவதும் நேற்று திங்கள்கிழமையன்று , மின் கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் , மாவட்ட தலைவர்கள் , மாநில , மாவட்ட , நிர்வாகிகளால் மனு அளிக்கப்பட்டது . அதனைத் தொடர்ந்து மேலும் அவற்றை வலியுறுத்தி திருப்பூரில் அடையாள ஆர்ப்பாட்டம் நடைபெறயிருக்கிறது . 

தமிழ் மாநில காங்கிரஸ் கொங்கு மண்டலம் சார்பில் வருகிற ஜூலை 30 ஆம் தேதி சனிக்கிழழை காலை .10.30 மணியளவில் திருப்பூர் மாநகராட்சி முன்பு எனது தலைமையில் " அடையாள ஆர்ப்பாட்டம் " நடைபெறுகிறது . 

இந்நிகழ்வில் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த மாவட்டத் தலைவர்கள் , மாநில , மாவட்ட நிர்வாகிகள் , துணை அமைப்பு தலைவர்கள் , நிர்வாகிகள் , தொண்டர்கள் கலந்துகொள்கின்றனர் . இயக்க நண்பர்கள் மற்றும் பொது மக்கள் அனைவரும் பெரும்திரலாக கலந்துகொண்டு ஆதரவுதருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TMG Party Protest on july 30


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->