இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா – முதல்வர் அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


தமிழ் இசையின் தெய்வம் என போற்றப்படும் இசைஞானி இளையராஜா, கடந்த 50 ஆண்டுகளாக திரையுலகில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்.

இந்நிலையில், அவரின் பிறந்த நாளான ஜூன் 2-ம் தேதி, தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தார்.

அன்னமையில் சட்டசபை உறுப்பினர் சிந்தனை செல்வன், "இளையராஜா சிம்பொனியை தமிழ்நாட்டில் நடத்த தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்" என கோரிக்கை வைத்தார்.

இதற்க்கு இன்று சட்டப்பேரவையில் முதல்வர் கொடுத்த விளக்கம் பின்வருமாறு:
"நானும் இளையராஜாவை சந்தித்தபோது இதையே கேட்டேன். 400-க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் ஒரே மேடையில் கச்சேரி நடத்துவது சாத்தியமில்லையென அவர் தெரிவித்தார்.இருப்பினும், விரைவில் இதை நிச்சயம் நடத்துவதாக அவர் உறுதியளித்துள்ளார்."

முதல்வர் அறிவிப்பு:

தமிழக அரசின் சார்பில் இளையராஜாவின் திரையுலகப் பயணத்திற்கும், லண்டன் சிம்பொனி நிகழ்ச்சிக்கும் பாராட்டாக, ஜூன் 2-ம் தேதி சிறப்பு விழா நடத்தப்படும்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TN Assembly MK Stalin Announce for Ilaiyaraaja 


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->