குடும்ப தகராறு: பெண் எடுத்த விபரீத முடிவு..மருத்துவமனையில் உயிருக்கு போராடும் இரு உயிர்கள்!  - Seithipunal
Seithipunal


கணவன் ,மனைவி சண்டையால்  2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சுரண்டை அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே வலங்கைப்புலி சமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் 40 வயதான கூலித்தொழிலாளி மகேந்திரன். இவருடைய மனைவி மகேஷ். இவர்களுக்கு சுதர்சன்,முகிலன் என்ற 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.  சமீபகாலமாக அடிக்கடி கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்படுவதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவில் அவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு  மகேந்திரன், மனைவி மகேஷை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த மகேஷ் பூச்சிக்கொல்லி மருந்தை தனது 2 குழந்தைகளுக்கும் குடிக்க கொடுத்துவிட்டு, அதனை தானும் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது இரு  குழந்தைகளும்  அலறி துடித்தநிலையில் உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவர்கள் மூவரையும்  மீட்டு சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவர்களின் உடல்நிலை மோசமானதால் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதுகுறித்து சேர்ந்தமரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கணவன் ,மனைவி சண்டையால்  2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சுரண்டை அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Family Dispute Womans Decision Two lives in the hospital


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->